சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாகசபை” தெரிவுக்கான “பொதுச்சபை” ஒன்றுகூடல் இன்றையதினம் 06.05.2018 பேர்ண் மாநிலத்தில் ஒபேர்புர்க் எனும் இடத்தில் நடைபெற்றது.
முதலில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில், முன்னைய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து முன்னைய செயலாளர் திரு.செல்லத்துரை சதானந்தன் அவர்களினால், “ஒன்றியத்தின் கடந்த கால செயல்பாடுகள்” குறித்து தெளிவாக விளக்கி, அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னைய பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களினால் “ஒன்றியத்தின் கடந்த கால கணக்கறிக்கை” குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னைய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால், *ஒன்றியத்தின் கடந்த இரண்டுவருட கால நிர்வாக செயல்பாடு உட்பட, பிரச்சினைகள், தீர்வுகள்” போன்றன குறித்து தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் “தற்போதைய நிர்வாகத்தினரையே, தொடர்ந்தும் செயற்படும்படி பலரும் நேரிலும், தொலைபேசி மூலமும், முகநூலிலும் தெரிவித்த கருத்துக்கும், எம்மீது கொண்ட நம்பிக்கைக்கும் நன்றியெனவும், ஆயினும் ஒழுங்கு விதியின்படி இதுவரையான நிர்வாகசபை கலைக்கப்பட்டு, புதிய நிர்வாக சபையையே தெரிவும் செய்யும்படி” கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து “பொதுச்சபையில்” கலந்து கொண்டோரின், கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, இவற்றுக்கு பதிலளித்த, முன்னைய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் மற்றும் முன்னைய செயலாளர் திரு.செல்லத்துரை சதானந்தன் ஆகியோரால் தெளிவான பதில் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து “புதிய நிர்வாக சபைக்கான” தெரிவு நடத்தப்பட்டது.
முதலாவதாக சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “தலைவராக” மீண்டும், திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்களே, பொதுச்சபையினரால், ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
முன்னைய செயலாளருக்கு “தனிப்பட்ட வேலைகள், நேரமின்மை காரணமாக”, புதிய “செயலாளராக” திருமதி.செல்வி சுதாகரன் தெரிவு செய்யப்பட்டார்.
“பொருளாளராக” மீண்டும் திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்களே தெரிவு செய்யப்பட்டார்.
“உபதலைவராக” திரு.லிங்கம் சஞ்சய் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
“உபசெயலாளராக” திரு.கனகசபை சபேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
பின்னர்….
“கல்விப் பொறுப்பாளர் மற்றும் கணக்காய்வாளர்” பொறுப்புக்கு திரு.சின்னத்துரை இலக்சுமணன் தெரிவு செய்யப்பட்டார்.
“பதில் கணக்காய்வாளர்” பொறுப்புக்கு திரு.சதாசிவம் பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டார்.
“இளைஞர் அணிப் பொறுப்பாளராக” திரு.கனகசபை சதீஷன் (பாடன் சதீஷ்) தெரிவு செய்யப்பட்டார்.
“இளைஞர் அணியின் பதில் பொறுப்பாளர்களாக”
திரு.அரியதாஸ் பிரதீபன்
திரு.தயாபரன் கீதன்
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்….
“இளைஞர் அணியின் ஆலோசகராக”..
திரு.செல்வரத்தினம் சுரேஷ் தெரிவு செய்யப்பட்டார்.
ஆலோசனை சபை உறுப்பினர்களாக..
திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன்
திரு.சுப்பையா வடிவேலு
திரு.தாமோதரம்பிள்ளை பிரேம்குமார்
திரு. வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் (குமார்)
திரு.பரநிருபசிங்கம் இராஜகோபால்
திரு.அரியபுத்திரன் நிமலன்
திரு.சுப்பிரமணியம் அன்பரசன் (சூரிச் அன்பு)
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகசபை ஐவர் உட்பட அனைத்துத் தெரிவுகளும், ஏகமனதாகவே, அவர்களின் விருப்பத்துக்கு இணங்க தெரிவு செய்யப்படடமை குறிப்பிடத்தக்கது. (திரு.நிமலன், திரு.பன்னீர் ஆகியோர் சமூகம் அளிக்காத போதிலும் (இலங்கை சென்றுள்ளதால்) பொதுச்சபையின் விருப்பத்துக்கு இணங்க, அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டனர். நன்றி..
“மக்கள் சேவையே மகேசன் சேவை”
இவ்வண்ணம்..
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.
06.05.2018
Post Views: 71