ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    இரண்டு வயது குழந்தை படுகொலை: தாய், தந்தை கைது – நடந்ததென்ன ?

    AdminBy AdminMay 16, 2018No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மாளிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தை, தொடர்மாடி குடியிருப்பில் இரண்டு வயது குழந்தையொன்று கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

    குழந்தையின் சடலத்தை  அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக நடவடிக்கை எடுத்ததாகவும்  இதன்போதே உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு, மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தை, தொடர்மாடி குடியிருப்பில், மர்மமாக உயிரிழந்த குழந்தையொன்றின் சடலத்தை பிரேத பரிசோதனை எதுவும் செய்யாது அடக்கம் செய்ய தயாராவதாக பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி அழைப்பு இலக்கம் ஊடாக தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து அது தொடர்பில்  மாளிகாவத்தை பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த தொடர்மாடி வீட்டுக்கு சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

     பொலிஸார் அவ்வீட்டுக்கு சென்ற போது இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளமையை  தெரிந்துகொண்டனர்.

    இது தொடர்பில் அங்கு பெற்றோர் என முன்னிலையான இருவரிடமும் பொலிஸார் செய்த விசாரணைகளில் குழந்தைக்கு சீனி அதிகரித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

     இதனையடுத்து  பொலிஸார் குழந்தையின் சடலத்தை பரிசோதித்த போது, இடது காலில் தீ காயம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனால் பொலிஸாருக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்படவே, கொழும்பு  மேலதிக நீதிவானுக்கு           ( புதுக்கடை 4 ஆம் இலக்க நீதிவான்) அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    இதன்போது சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த  நீதிவான் உத்தரவிட்டுள்ள நிலையில்,  நேற்று கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு குழந்தையின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

    கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் அதனை பிரதான சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா முன்னெடுத்தார்.

    இதன்போது குழந்தை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

     இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த சிறுவன் 5 மாத குழந்தையாக இருந்த போது கடிதம் ஒன்றின் ஊடாக தத்தெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    Post Views: 592

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு 5 நீல இரத்தினக்கற்கள்: ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    February 3, 2023

    நுவரெலியாவில் மகனால் தந்தை படுகொலை

    February 3, 2023

    மரண தண்டனை கைதிக்கு 14 வருடங்களுக்குப் பின் விடுதலை.

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    May 2018
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version