மட்டக்களப்பு – மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பு அம்புலன்ஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயளி மட்டக்களப்பு போதனா வைதியசாலையில் அனுமதித்துவிட்டு மீண்டும், மாவடிவேம்பு மாவட்ட வைத்தியசாலைக்கு திரும்பிய வைத்தியசாலைக்குள் நுளைய முற்பட்ட வேளை மட்டக்களப்பில் இருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் அம்புலன்ஸ் வண்டியுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கல்முனை மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த,எம்.சாஹிர் (வயது 27) மற்றும் ஏ.எம்.ஆசிக் (வயது 24) ஆகியயோரே என பொலிஸாரின் ஆரமபகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.