பொகவந்தலாவ பேனோகோட் தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் ஞாயிற்று கிழமையான இன்று (20.05.2018) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான நிர்மலா என இணங்காணப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது, வீட்டில் கணவரும், குறித்த பெண்ணுக்கும் இடையில் குடும்ப பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளதாகவும், குறித்த சம்பவம் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மரணவிசாரணைக்காக அட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு இது கொலையா அல்லது தற்கொலையா என்பதனை அறிந்து கொள்வதற்காக சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.