இன்று திருச்சி சமயபுரம் கோவிலுக்குள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றுள்ளது. மசினி என்ற அந்த யானை திடீர் என மதம் பிடித்ததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தடுக்க சென்ற சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவர் வந்த சென்ற சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்தாக கூறப்படுகின்றது. திருவிழா காலங்களில் யானைகளுக்கு மதம் பிடிப்பது வழக்கம் ஆனால் சாதாரண நிலையில் கோவிலுக்குள் யானைக்கு மதம் பிடித்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை மசினிக்கு மதம் பிடித்ததற்கான காரணம் என்ன என விசாரனை நடத்தப்பட்டு வருகின்றது. தேர்ச்சி பெற்ற 6 பாகன்கள் வரவழைக்கப்பட்டு யானை கட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது யானை சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பாகனின் உடல் யானையிடமிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. யானையை எப்படி வெளியே எடுத்து வருவது என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஏற்கனவே இங்கிருந்த யானை ஒன்று மதம் பிடித்து அதை வண்டலூர் பூங்காவில் விடப்பபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
யானை பாகனை தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.