வவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத குழந்தையொன்றினைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை வான் ஒன்றில் வந்த ஆறுபேர் கொண்ட குழுவினரே இவ்வாறு குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசுதரன் வானிஷன் என்ற குழந்தையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் உள்ள முரண்பாடு காரணமாக தந்தையே ஆட்களை வைத்து குழந்தையை கடத்தியுள்ளதாக குழந்தையின் தாய் கூறியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.