2018 இல் ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளினால் 1313 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளது.
அதேவேளை இவ் வருடம் மார்ச் மாதத்தில் மட்டும் உல்லாச பயண துறையினால் 433 மில்லியன் டொலர் வருமானமாக கிடைக்க பெற்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் மாதத்தில் 24.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தியா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2018 இல் முதல் காலாண்டில் 707924 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது 2017 உடன் ஒப்பிடுகையில் 17% அதிகரிப்பாகும்.
அதே வேளை வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களினால் மார்ச் மாதம் 678 மில்லியன் டொலர் பணம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2017 இல் இத் தொகை 643 மில்லியன் டொலராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.