ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தேசிய செயற்திட்ட மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.
அவரது மனைவி மனைவி உயிரிழந்துள்ளமையினால் இரு பிள்ளைகளும் பெரும் கஷ்ட்ங்களை அனுபித்து வருவதனால் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்த தெரிவித்த ஜனாதிபதி ஆனந்த சுதாகரனைப் போல் பலர் சிறையில் உள்ளனர். இவரை விடுவித்தால் அவர்களும் தம்மை விடுவிக்குமாறு கோருவார்கள். இதனால் உடனடியாக இதற்கு இடமளிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பதிலை அடுத்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் அவ்வாறாயின் ஆயுள் தண்டனை கைதியான ஆனந்த சுதாகரனை பிள்ளைகள் அடிக்கடி சென்று பார்க்கக்கூடிய வகையில் அருகில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றுமாரு கேட்டுள்ளார். இதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதனற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.