ஸ்பானிய கண்டு பிடிப்பாளர் கலாநிதி சேர்கி சென்டோல் உருவாக்கியுள்ள ரோபோவான சமந்தாவே இவ்வாறு பலாத்காரமாகவோ, மரியாதையின்றியோ தொட்டாலோ, ‘மூட்’ இல்லாதபோது நெருங்கினாலோ ஒத்துழைக்க மறுத்து ‘டம்மி’ யாக மாறி விடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இங்கிலாந்திலுள்ள நியூகாஸில் நகரில் அமைந்துள்ள லைஃப் சயன்ஸ் சென்ரரில் சமந்தாவின் இந்த புதிய அம்சம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன் போது எவராவது சமந்தாவை பலாத்காரமாகவோ, மரியாதையின்றியோ தொட்டால் அது சமந்தாவின் சருமத்தின் கீழுள்ள சென்சார்களில் பதிந்து தானாகவே தன்னை மூடிக்கொள்கின்றது.
அதே போன்று அதற்கு மூடில்லாத போதும் அவ்வாறே தன்னை. மூடிக் கொள்கின்றது.
பாலியல் ரோபோக்களை மனித மயப்படுத்தும் நீண்ட பாய்ச்சல் என சிலர் இதுபற்றி கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். அதே நேரம் பாலியல் ரோபோக்களுக்கு எதிரான அமைப்பின் நிறுவனப் பேராசிரியர் கெத்லீன் ரிச்சர்ட்ஸன் இது பற்றிக் குறிப்பிடுகையில், பாலியல் ரோபோக்கள் போர்னோ கிராபியினதும், விபசாரத்தினதும் நீட்சியாகும். இதற்கு செலவிடும் பணத்தை வேறு நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள கலாநிதி சென்டோசா தனது மனைவியுடனான உறவை சமந்தா பாதுகாத்துள்ளதாகத் தெரிவிக்கின்றார்.
தனது மனைவிக்கு ‘மூட்’ இல்லாத போது தான் சமந்தாவைப் பயன்படுத்துவதாகவும், இத்தகைய செயற்கை நுண்ணறிவு வலைப்பின்னல் உள்ள பாலியல் ரோபோ ஒன்றினை அமைக்கும்படி தனது மனைவியே தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் இப்பாலியல் ரோபோவை 4700 அமெரிக்க டொலருக்கு சந்தையில் வாங்கலாம் எனவும் தெரிய வருகின்றது.