தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுந்தினம் இந்தியாவில் தனது இரண்டாவது திருமணத்தை 44ஆவது வயதில் செய்துள்ளார்.
முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும் வைத்தியர் பெண்ணை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் சில வருடங்களின் பின் தனது இரண்டாவது திருமணத்தை மிக இரகசியமாக இந்தியாவில் செய்துள்ளார்.
வடபுலத்தின் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்ந்த ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் பிறந்து தனது சிறு வயது கல்வியை கொழும்பில் கற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் நிறைவுசெய்திருந்தார்.
இங்கிலாந்தில் வைத்தியராக கடமையாற்றும் தமிழ் பெண் ஒருவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் திருமணத்தின் பின் சில வருடங்களிலேயே அந்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முந்தினம் காரைநகரை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சட்டத்தரணியான பெண் ஒருவரை இந்தியாவில் மணம்முடித்திருக்கிறார்.
இந்த திருமண நிகழ்வு மிக இரகசியமான முறையில் கட்சி உறுப்பினர்களுக்கே தெரியாமல் இரு வீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன் தற்போதைய செயலாளராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.