துருக்கியில் பயணிகள் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கேரியாவின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்ற குறித்த புகையிரத்தில் 360-க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ள நிலையில் புகையிரதத்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.