புலியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு சமைக்கச் சொல்லுகிற உலகம்’ என உள்ளுக்குள்ளே பாடிக்கொண்டு, இரண்டு கரண்டிகளை வைத்து கோவக்காயைக் கிண்டிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம்.
* நேற்று ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்ட பொன்னம்பலம், ரித்விகா, ஷாரிக் ஆகியோருடன் சேர்ந்து குக்கிங் டீமில் இணைந்தார்.
`ரசம் வைங்க, அது வேஸ்ட் ஆகும், இப்படிப் பண்ணுங்க’ என எல்லோராலும் அவருக்கு அறிவுரை மேல் அறிவுரையாக வழங்கப்பட்டது. ஏதேதோ சமாளித்துப் பார்த்த பொன்னம்பலம், `சூப்ல மிளகாய்த் தூள் போட்டால் மட்டன் கொழம்பாகிடும்’ என்ற நூதனமான ஐடியா கொடுத்தார்.
க்ளீனிங் டீமில் இருக்கும் பாலாஜி பதறிப்போய் எடக்கு மடக்காக எதை எதையோ பேசி பொன்னம்பலத்தை லாக் செய்துகொண்டே இருந்தார். `இதுக்குப் பேசாம நான் ஜெயில்லே இருந்திருப்பேனே’ என்பதுதான் பொன்னம்பலத்தின் மைண்டு வாய்ஸாக இருந்திருக்கும்.
ரித்விகாவுக்கும், ஷாரிக்குக்கும் இதே கதிதான் போல. பாவம் ஒருவருக்குக்கூட சமைக்கத் தெரியவில்லை. எதற்கு எந்தப் பருப்புப் போடுவது என்பதும் தெரியவில்லை.
பாலாஜிதான் பொறுமையாகச் சமைப்பதற்கான டிப்ஸ்களை கொடுத்துக்கொண்டிருந்தார். அநேகமாகச் சாப்பாடு சரியில்லை எனச் சண்டை வரும் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
* க்ளீனிங் டீமை சேர்ந்த வைஷ்ணவி, கெமிஸ்ட்ரி வாத்தியாராக மாறி ஏதேதோ கெமிக்கல் ரியாக்ஷன் செய்து படு தீவிரமாக பாத்ரூமை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
`என்னடா இது எக்ஸ் தலைவருக்கு வந்த சோதனை!’. மறுபக்கம் போலீஸ் உடை அணிந்திருந்த மஹத், எல்லாப் பக்கமும் ரோந்து வந்துகொண்டிருந்தார்.
கிச்சனில் க்ராஸ் ஆனதைப் பார்த்ததும் `சார் வணக்கம் சார்’ என்று குக்கிங் டீம் கோரஸாக சலாம் போட்டது. மிடுக்கான நடையுடன் மஹத் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்த நித்யா, `எங்க ட்விங்கிள்… ட்விங்கிள்… லிட்டில் ஸ்டார்’ சொல்லு எனக் கலாய்த்துக்கொண்டிருந்தார்.
மஹத்தும் கதாபாத்திரமாக மாறி, சிறிது நேரம் விஜய் குமாராகவே நடித்துக்கொண்டிருந்தார். நித்யா கலாய்த்தது மஹத்தையா, ஐ.பி.எஸ் விஜேய்ய்ய் குமாரையா?
* மறுபடியும் இந்தப் பக்கம் குக்கிங் டீம். இவர்களும் சமையலை விடுவதாக இல்லை. `ரசத்தில் குழம்பை ஊத்தலாம், சூப்பில் மட்டனைப் போட்டுக் குழம்பாக்கிடலாம்’ என்று எதையாவது செய்துகொண்டேதான் இருந்தார்கள்.
பாலாஜிதான் இதில் பாவம். `இப்படிப் பண்ணுங்க அப்படிப் பண்ணுங்க’ எனச் சொல்லி அவருக்குக் கொடுக்கப்பட்ட க்ளீனிங் வேலையோடு சேர்த்து இதையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
இதற்கு இடையில் கன்ஃபஷன் ரூமிலிருந்து வெளியே வந்த ஜனனி, கார்டன் ஏரியாவை நோக்கி ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார். கார்டன் ஏரியாவில் நடந்த ஒரு நிகழ்வைக் கூட பிக் பாஸ் காட்டவில்லை. இன்று இரவு ஒட்டுமொத்த எபிசோடும் அங்குதான் போல.
* `நான்கு பேரைத் தவிர யாருக்கும் வொர்க் இல்லை, ரொம்ப போர் அடிக்குது’ என அந்த வாரத்தின் தலைவி ரம்யாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார், ஜனனி. பாத்ரூம் பக்கம் காட்டப்பட்ட கேமராவில் கைதிகள் அணியும் ஆடையோடு நொண்டிக்கொண்டே நடந்து வந்தார், ஐஷ்வர்யா. போட்டியாளர்களின் உடைமைகளை போலீஸ் பாதுகாப்பதுதான் டாஸ்காக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.
தீவிரமாகச் சமைத்துக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம் போலீஸ் உடை அணிந்திருந்த சென்றாயன், `என்னங்க சமைச்சாச்சா’ எனக் கேட்டார். `அட இருய்யா நானே தவழ்ந்துகிட்டு இருக்கேன்’ என்பது போல் எதையோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தார், பொன்னம்பலம்.
`புலியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு சமைக்கச் சொல்லுகிற உலகம்’ என உள்ளுக்குள்ளே பாடிக்கொண்டு, இரண்டு கரண்டிகளை வைத்து கோவக்காயைக் கிண்டிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம்.
* எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டிருந்த பொன்னம்பலமும், ஷாரிக்கும் சேர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டே சமைத்துக்கொண்டிருந்தார்கள். நடுவில் கைதி உடையில் வந்த யாஷிகா இவர்கள் சமைத்ததை டேஸ்ட் செய்துகொண்டிருந்தார்.
இவர்கள் யாருக்கும் சமைக்கத் தெரியாது என்பது மற்ற போட்டியாளர்களுக்குத் தெரிந்துவிட்டது என நினைக்கிறேன். ஷோ கேஸில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்வையிடுவதைப்போல் ஒவ்வொருவராக வந்து பார்த்துக்கொண்டும், இவர்கள் செய்த சாப்பாட்டை ருசித்துக்கொண்டும் இருந்தார்கள்.
நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் என்னென்ன வேடம் என்பது தெரிந்துவிட்டது. மஹத் ஆய்வாளராகவும், சென்றாயன் துணை ஆய்வாளராகவும், மும்தாஜ் கான்ஸ்டபிலாகவும், யாஷிகாவும், ஐஷ்வர்யாவும் திருடனாகவும் இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இதை வைத்து இடையில் நடக்கும் சண்டைகளும் சர்ச்சைகளும்தாம் இன்று இரவு கன்டென்டாக இருக்கக்கூடும். லெட்ஸ் வெயிட் அண்டு வாட்ச்!
இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்? (பிக்பாஸ் சீசன் 2 : 21-ம் நாள் -வீடியோ)