புளியங்குளம் ராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், ஒருவர் பரிதாபமாக பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொறி ஒன்றும் கிளிநொச்சியில் இருந்து வவூனியா நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.