கிணற்றில் தவறி விழ்ந்து காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாயும் மகளும் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (27) நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக மகள் (வயது 17) சென்றிருந்த போதே கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார். இதனைக் கண்ட தாயார் (வயது 48) மகளை காப்பாற்ற போராடிய சமயத்தில் அவரும் கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.
இருவரின் குரல் கேட்ட அயலவர்கள் உடனடியாக கிணற்றினுள் காயங்களுடன் காணப்பட்ட இருவரையும் மீட்டெடுத்து சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது சிகிச்சைக்குப் பின் அவர்களது உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.