யாழ்ப்பாணம் – நெலுக்குளம் புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ள அதேவேளை, குறித்த இளைஞர்கள் தலைக்கவசம் அணியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில், அரியாலை, பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், 29 வயதுடைய கந்தசாமி சந்திரகுமார் மற்றும் 27 வயதுடைய இராஜகோபால் கிரிசாந் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் சீக்கியன் சஞ்சீவன் என்ற இளைஞன், படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் புகையிரதம் வரும் வேளை அக் கடவையில் சமிக்ஞை விளக்கு போடப்பட்ட அதேவேளை, பாதுகாப்பு வேலி இருக்கவில்லை. இந்நிலையில், இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்டபோது வந்த கடுகதி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.