மன்­னார் முருங்­க­னில் ஆலய வழி­பாட்­டுக்காக பெற்றோ­ரு­டன் சென்ற 2 வய­து சிறு­வன் கடத்­தப்­பட்டு சுமார் 4 மணி நேரத்­தில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

 முருங்கன் பகுதியில் உள்ள ஆல­யத்­துக்­குப் பெற்­றோ­ரு­டன் 2 வயதுடைய சிறு­வன் நேற்­று (29)  மதியம்  ஒரு மணி­ய­ள­வில் சென்­றுள்­ளார்.

 சிறிது நேரத்­தின் பின்­னர் சிறு­வ­னை ஆலய பகுதியினுள்  காணாத நிலையில் பெற்­றோர் தேடி­யுள்­ள­னர். எனினும் சிறுவனை குறித்த பகுதியில் காணவில்லை.

உடனடியாக பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததோடு, சிறுவனின் உறவினர் ஒருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த நிலையில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த ஆலயத்திற்கு வந்திருந்த திருக்­கோ­வி­லைச் சேர்ந்­த­வர், வழி­பாடு முடி­வ­டை­வ­தற்கு முன்  ஆலயத்தில் இருந்து வெளி­யே­ சென்றதை பொலிஸார் விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்டுள்ளனர்.

 உடனடியாக திருக்­கோ­வில் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது. வவு­னி­யா பொலி­ஸார் மற்­றும் மன்­னார் மாவட்­டத்­தின் ஏனைய பொலிஸ் பிரி­வு­க­ளும் தகவல் வழங்கப்பட்டது.

 இதன் போது குறித்த நபர் வவு­னியா பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து மன்­னார் நோக்­கிச் செல்­லும் பேருந்­தில் சந்­தே­க­ ந­பர் சிறு­வ­னு­டன் ஏறி­யதை வவுனியா பொலி­ஸார் அவ­தா­னித்­த­னர்.

உடனடியாக செயல் பட்ட பொலிஸார் சந்­தே­க­ந­ப­ரைப்  மடக்­கிப் பிடித்­துக் கைது செய்­த­தோடு குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை (30) பெற்­றோ­ரி­டம் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டார். சிறு­வ­னைக் கடத்­தி­ய­மைக்­கான கார­ணம்  இது வரை வெளியாகவில்லை.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.