அப்படித்தான் ஒரு 15 வயசு பையன் லவ் பண்றான்.. இவன் கொலை செய்து சிக்கியும் உள்ளான். காதலுக்கு போதிய வயசு இல்லை.
இதை சுட்டிக்காட்டித் தட்டி கேட்டார் என்பதற்காக சொந்த அத்தையையே போட்டுத் தள்ளி விட்டான் இந்த பையன். அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதி சங்கரசுப்பு -தமிழ்ச்செல்வி.
சங்கரசுப்பு தன் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மளிகை கடை வைத்துள்ளார். வயது 44. தமிழ்ச்செல்விக்கு வயது 35. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டிருந்தது. இதனால் பயங்கரமான ஒரு தேர்ந்த கொலையாளிதான் இதை செய்திருக்க கூடும் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த சிறுவன் யார் என்றால் தமிழ்ச்செல்வியின் உறவுக்காரரின் மகனாம். கொலைக்கு என்ன காரணம் என்றால், தமிழ்ச்செல்வியின் மகளை 15 வயது சிறுவன் காதலித்து உள்ளார் (சிறுவனுக்கு தமிழ்ச்செல்வி அத்தை முறையாம்).
இப்போது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
எனவே இளைய சமுதாயத்தை கெடுத்து சூறையாடி கொண்டிருக்கும் ஆபாசதளங்கள் மற்றும் வக்கரிக்கும் சினிமா, தொலைக்காட்சியின் எல்லைமீறிய காட்சிகளை தடுத்து நிறுத்த உடனடியாக அரசு முன் வரவேண்டும்.