யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடி பொலிஸார் சற்றுமுன்னர் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டு அறிக்கைகளையும் விநியோகித்து வருகின்றனர்.