வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது..
<
கருவரையில் வீற்று இருக்கும் துர்க்கை அம்மனுக்கும்,வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள் ஆராதனைகள் இடம்பெற்றது.
அங்கு இருந்து உள்வீதியுடாக வலம் வந்து கொடிமரத்தினை வந்தடைந்தது சுபநேரத்தில் கொடியேற்றப்பட்டு அங்கு தம்பகொடிமரத்திற்கான விசேட அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்றன.
இவ் ஆலயத்தின் மஹோற்சவ ஆரம்பமாகி எதிர்வரும் 24.08 இனிதே மஹாஉற்சவம் இனிதே நிறைவடையும்..இவ் ஆலயத்தின் தேர்திருவிழா 23.08,மறுநாள் தீர்த்ததிருவிழாவுடன் நிறைவடைகின்றன..
மஹோஉற்சவக்கிரிகைகளை ஆலயபிரதம குரு சிவ ஸ்ரீ சின்னத்துறை சேதுராஜா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இவ் கிரிகைகளை நடாத்திவைத்தார்.
இங்கு பெருந்திராளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.