டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயின் உடல் இன்றிரவு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாமானார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாஜ்பாயின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
வாஜ்பாயின் புகழுடல் இரவு முழுவதும் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
வீட்டில் வைக்கப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு குடும்பத்தினர் முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அஞ்சலி
அவரை தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்
5 மணிக்கு உடல் அடக்கம்
இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு ராஜ்காட் அருகே உள்ள விஜய்காட் பகுதியில் வாஜ்பாய் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
டெல்லி விஜய்காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க ஒன்றரை ஏக்கர் நிலத்தை நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..