கேரளா வெள்ளத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
முதலில் பெரிய அளவில் இந்த விஷயம் தமிழ்நாட்டில் பேசப்படாமல் இருந்தாலும், தற்போது தமிழகம் முழுக்க மக்கள் இதற்காக களமிறங்கி உதவி வருகிறார்கள். இங்கிருந்து நிறைய உதவி பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு செல்ல காத்திருக்கும் லாரியை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஓராயிரம் நன்னி தமிழ் மக்களே என்று இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், 10 லாரியில் உதவிகள் வந்து குவிந்துள்ளது என்று மெய் சிலிர்த்து போய் பாராட்டி உள்ளார்.
இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. என்ன வேறுபாடு இருந்தாலும், தமிழக அரசு எப்படி நடந்து கொண்டாலும் தமிழக மக்கள் நமக்காக உதவுகிறார்கள் என்று இவர் சந்தோசமாக வீடியோ வெளியிட்டு கலங்கி உள்ளார்.
தமிழர்கள், மலையாளிகள் என்று பலர் இதில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இரண்டு நாள் முன்பு ஏற்பட்ட முல்லைப்பெரியாறு பிரச்சனை காரணமாக, மலையாளிகள் சிலர் தமிழர்கள் மீது கோபத்தில் இருந்தனர். இப்போது அந்த பிரச்சனைகளை மறந்து இரண்டு மாநில மக்களும் ஒன்று கூடி உள்ளனர். தண்ணீர் பிரித்த உறவை தண்ணீரே சேர்த்து வைத்துள்ளது.
தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரளா சகோதரர் மற்றும் காவல் துறையினர்..!! #KeralaFloods #KeralaFloodRelief #KeralaSOS #SaveKerala #PrayForKerala #pray_for_kerala #StandwithKerala pic.twitter.com/sOqN58e1al
— Subashini B (@SubashiniBA) 19 août 2018