முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை மாடு ஈன்றுள்ள சம்பவம் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள மாடு ஒன்றே குறித்த இரு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது.
கன்றும் தாய்பசுவும் நலமாக இருப்பதாக பசு மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.