அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் அமைத்து முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14ஆவது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் , 6 ஆம் திகதி இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளார்.
இதற்கென சிறப்பு சட்டம் இயற்ற இருப்பதாகவும், அதற்காக வெள்ளை மாளிகை சட்டத்தரணிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கர் அல்லாதவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது உலகிலேயே அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் நிலை எனவும் இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.