வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை இன்று காலை கைதுசெய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் நேற்று மாலை வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகே வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
சம்பவத்தில் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.