இலங்கைப் பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வழிநடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.
இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா யோசனை கையளிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது.
அந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்.
மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதமென தீர்மானம் நிறைவேற்றம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்றுக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118பேர் கைச்சாத்திட்ட யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேராவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது.