சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி ரெஹானா பாத்திமாவை இன்று பொலிஸார் கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மொடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக தோடம் பழம் மற்றும் அப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த மாதம் 19ஆம் திகதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.
கேரள அமைச்சியின் உத்தரவையடுத்து அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
குறித்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில இஸ்லாமி ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.
இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய குற்ற சட்டம் 295A-வின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பொலிஸார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் பிணை மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் கடந்த 16ஆம் திகதி தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில், கொச்சி மாவட்டம், பலரிவோட்டத்தில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ரெஹானாவை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.