யுத்தத்தில் தனது இரு கால்களையும், வலது கையின் இரண்டு விரல்களையும் இழந்த முன்னாள் இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்திய சக்கர நாற்காலி பயணம் இன்று(10) கிளிநொச்சி கடந்தது.
கடந்த மூன்றாம் திகதி தெய்வேந்திரமுனையில் ஆரம்பமான பயணம் இன்று கிளிநொச்சியை கடந்து நாளை(11) வடக்கு முனையான பருத்திதுறை பேதுரு முனையில் நிறைவடையவுள்ளது.
சுமார் 580 கிலோமீற்றர் தூரம் இன ஐக்கியத்திற்கான சக்கர நாற்காலி பயணம் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையவுள்ளது.