மஹாராஜா பூபீந்தர் சிங், தனது தந்தையின் மறைவிற்கு பிறகு, ஒன்பது வயதில் அரியணை ஏறிய அரசர்.
இந்தியாவில் சொந்த விமானம் வைத்திருந்த முதல் நபரும் இவர் தான். இவரிடம் 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன. இப்படி இவரை பற்றி புகழ்ந்து, இவரது கொடையும், நல்ல பண்புகளும் பற்றி கூற பல புத்தகங்கள் இருக்கின்றன.
ஆனால், மஹாராஜா பூபீந்தர் சிங்கின் வாழ்வியல் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. குடிப் பழக்கம், பெண்களின் மேலான போதை என இவரை பற்றிய இன்னொரு பக்கமும் இருக்கிறது…
பெண் மயக்கம்!
தன் அரண்மனையில் இருக்கும் பெண்களை அழகுப்படுத்த நவீன அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் ஆடைகள் வாங்கி தருவது போன்றவை செய்துள்ளார்.
9 கிலோ உணவு!மஹாராஜா பூபீந்தர் சிங் தினமும் ஒன்பது கிலோ உணவு உட்கொண்டு வந்தார் என்ற தகவலும் புரளியாக பேசப்பட்டு வந்துள்ளது. இது மட்டுமின்றி செக்ஸ் சார்ந்த பசியும் இவருக்கு அதிகம் என கூறப்பட்டு வந்துள்ளது. இவர் தனக்கு பிடித்த பெண்களுக்கென ஒரு தனி அந்தபுரமும் அதில் 350 பெண்களை தங்கவைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
நிர்வாணம்!
ஒரு புத்தகத்தில் மஹாராஜா பூபீந்தர் சிங் வருடத்திற்கு ஒருமுறை நிர்வாணமாக அனைவர் முன்பும் தோன்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வைர மார்பு சட்டை!
மஹாராஜா பூபீந்தர் சிங் தங்கம் மற்றும் வைரத்தால் உருவாக்கப்பட்ட வைர மார்பு சட்டை / கவசம் அணியும் பழக்கம் கொண்டிருந்தார். இதன் மூலம் அவரது விறைப்பு முழுமையாக இருக்கும் என கருதினார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
அந்தரங்க உறுப்பு!
மஹாராஜா பூபீந்தர் சிங் நிர்வாணமாக தோன்றும் நாளில் பெரும் கூட்டம் கூடும் என்றும். இவர் இப்படி நிர்வாணமாக தோன்றுவதால் கெட்ட சக்திகள் நீங்கும் என்றும் மக்கள் எண்ணியதாக கூறப்படுகிறது.
ஆயிரம் வைரங்கள்!
மஹாராஜா பூபீந்தர் சிங்கின் மார்பு கவசத்தில் 1001 வெள்ளை மற்றும் நீலநிற வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இது போக இவருக்கென சிறப்பாக பாரிஸில் இருந்து ஒரு நெக்லஸ் வடிவமைக்கப்பட்டது.
நெக்லஸ்!
இந்த நெக்லஸின் விலை 25 மில்லியன் டாலர்கள் ஆகும். இதில் 2930 வைர கற்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
ஹிட்லர் அளித்த பரிசு! ஒருமுறை மஹாராஜா பூபீந்தர் சிங் ஹிட்லரை பெர்லின் சென்ற போது சந்தித்ததாகவும், இவரது வாழ்க்கை முறை கண்டு வியந்த ஹிட்லர் இவருக்கு ஒரு மேபேக் (Maybach) பரிசாக அளித்தார் என்றும் கூறப்படுகிறது.
மரணம்!
மஹாராஜா பூபீந்தர் சிங் 1938 வரை ஆட்சி செய்தார் (தான் இறக்கும் வரை). அதன் பிறகு இவரது மகன் மஹாராஜா யாதவிந்திரா சிங் ஆட்சி பொறுப்பு ஏற்றார்.
மஹாராஜா பூபீந்தர் சிங் 1938 வரை ஆட்சி செய்தார் (தான் இறக்கும் வரை). அதன் பிறகு இவரது மகன் மஹாராஜா யாதவிந்திரா சிங் ஆட்சி பொறுப்பு ஏற்றார்.