ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!!; ‘கணவரை என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு

    AdminBy AdminJanuary 6, 2019No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரை என்னுடன் வந்து விடு என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    நல்லூர், திருப்பூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா(வயது 19). இவர் முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அண்ணாநகரை சேர்ந்த பழனிசாமியின் மகன் நவீன்குமாரை(26), சூர்யா காதலித்தார். இருவரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து நவீன்குமாரும், சூர்யாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 5–ந்தேதி செங்கப்பள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி இருவரும் நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது வீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதன்பின்னர் சூர்யா தனது காதல் கணவர் நவீன்குமார் வீட்டில் தனது இல்லற வாழ்க்கையை தொடங்கினார்.

    நவீன்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் அவரது தாய் காளீஸ்வரியும் அவர்களுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சூர்யாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை நவீன்குமார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

    கடந்த ஒரு மாதத்தில் 3 முறை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் நவீன்குமார் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவரது தாய் காளீஸ்வரியும் இளநீர் விற்பதற்காக ராக்கியாபாளையத்துக்கு சென்று விட்டார்.

    பின்னர் அன்று இரவு வேலை முடிந்து நவீன்குமார் வீடு திரும்பினார். வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்தது.

    பலமுறை மனைவி பெயரை சொல்லி கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்தார்.

    201901050314062597_The-woman-committed-suicide-in-a-month-of-marriage-in_SECVPF.gifஅப்போது வீட்டுக்குள் சூர்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணம் ஆகி ஒரு மாத காலத்தில் உடல்நிலை சரியில்லாததால் சூர்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சூர்யாவின் இடது கையில், ‘நான் உன்னை விட்டு தனிமையில் பிரிந்து செல்ல மனம் இல்லை.

    என்னுடன் வந்து விடு’ என எழுதி வைத்து உள்ளார். வங்கி பாஸ்புத்தகத்தில், ‘‘நவி மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன்.

    என்னுடன் வந்து விடு’’ என எழுதி வைத்து இருக்கிறார். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தார்.

    தற்கொலை செய்து கொண்ட சூர்யா அவரது கணவரையும் என்னுடன் வந்து விடு என கையில் எழுதி வைத்து இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சூர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு மாத காலம் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    திருமணம் ஆகி ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Post Views: 11

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.

    March 30, 2023

    உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி

    March 30, 2023

    வட்ஸ் அப் காதல் ; சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபருக்கு வலை வீச்சு

    March 29, 2023

    Leave A Reply Cancel Reply

    January 2019
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Dec   Feb »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version