ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, March 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    விக்­னேஸ்­வ­ரனின் ஜன­நா­யகம். தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்­கத்­தின்­போது, ஏற்­ப­டுத்­திய அதிர்வு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்­கத்தில் இருக்­க­வில்லை.

    AdminBy AdminJanuary 29, 2019No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விக்­னேஸ்­வ­ரனின் ஜன­நா­யகம் ‘தமிழ் மக்கள் பேர­வை­யிலும் சரி, மாற்றுத் தலை­மைக்­கான

    உரு­வாக்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுத்­த­போதும் சரி, விக்­னேஸ்­வ­ரனை முன்­னுக்குத் தள்ளி விடு­வதில் முக்­கி­ய­மாகச் செயற்­பட்ட பிர­ப­லங்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள், கட்சி என்று வந்­ததும், பின்­வாங்கிக் கொண்­டுள்­ளனர்’.

    தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்­கத்­தின்­போது, ஏற்­ப­டுத்­திய அதிர்வு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்­கத்தில் இருக்­க­வில்லை. தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்­கத்தில் இருந்­த­ளவு அதிர்வை, அதன் நிர்­வா­கிகள் அறி­விப்பு ஏற்­ப­டுத்­த­வில்லை.

    விக்­னேஸ்­வரன் என்ற தனி­ம­னித ஆளு­மையை சுற்றி உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் விம்­பத்தின் அதிர்வு குறைந்து கொண்டு வரு­கி­றதா என்ற கேள்­வியை இது எழுப்பி நிற்­கி­றது.

    தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் முத­லா­வது மத்­திய செயற்­குழுக் கூட்­டத்தை வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் நடத்­தி­யி­ருந்தார்.

    முத­லா­வது வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடி­வுக்கு வரு­வ­தற்கு முதல் நாள், தனது புதிய கட்­சி­யான தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்கம் பற்றி அவர் அறி­வித்­தி­ருந்தார்.

    தமிழ்த் தேசிய அர­சியல் பலத்த அதிர்வை ஏற்­ப­டுத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட, விக்­னேஸ்­வ­ரனின் புதிய கட்சி பற்­றிய அறி­விப்பு, சில நாட்­களில் எதிர்­பா­ராத சூழ­லுக்குள் சிக்க நேரிட்­டது.

    அவர் தனது கட்­சியை அறி­வித்த இரண்டு நாட்­க­ளி­லேயே, கொழும்பு அர­சி­யலில் ஏற்­பட்ட ஆட்­சிக்­ கு­ழப்­பங்கள், விக்­னேஸ்­வ­ரனின் புதிய கட்­சியை மூழ்­க­டித்து விட்­டன.

    கொழும்பு அர­சியல் பற்­றிய பர­ப­ரப்பும், அதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வகி­பா­க­முமே அதிகம் பிர­ப­ல­மா­னது. இது, புதிய அர­சியல் கட்­சியின் எழுச்­சிக்கு, வேகத்­தடை போட்­டது போல அமைந்து விட்­டது.

    ஆனாலும், விக்­னேஸ்­வரன் தொடர்ச்­சி­யான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி, புதிய கட்­சிக்­கான கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வதில் ஈடு­பட்டு வந்தார். அதன் தொடர்ச்­சி­யாக – கிட்­டத்­தட்ட புதிய கட்­சியை அறி­வித்து மூன்று மாதங்­க­ளுக்குப் பின்னர், கட்­சியின் நிர்­வா­கி­களை அறி­வித்­தி­ருக்­கிறார்.

    கடந்­த­வாரம் நடந்த மத்­திய குழுக் கூட்­டத்­தி­லேயே கட்­சியின் நிர்­வா­கி­களின் பெயர்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

    இந்தப் பட்­டி­யலைப் பார்த்­த­வர்­க­ளுக்கு பலத்த ஏமாற்றம். ஏனென்றால், அதில் பொது­மக்­க­ளுக்கு அதிகம் அறி­மு­க­மா­ன­வர்கள் அரி­தா­கவே இருந்­தனர். எதிர்­பார்க்­கப்­பட்ட பல­ரையும் காண­வில்லை.

    எல்லாத் தரப்­பி­ன­ரையும்- அதா­வது எல்லா தொழில்­க­ளையும் செய்­கி­ற­வர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக தமது கட்­சியின் நிர்­வாகக் கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்று முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

    ஆனாலும், கட்சி உரு­வாக்கம் ஒன்றில், ஆளுமை மாத்­தி­ர­மன்றி அறி­மு­கமும் முக்­கி­ய­மா­னது. தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் நிர்­வா­கிகள் பட்­டி­யலில், பேரா­சி­ரியர் வி.பி.சிவ­நாதன், அருந்­த­வ­பாலன், யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முன்னாள் தலைவர் கிருஷ்­ண­மீனன், திரு­கோ­ண­மலை நக­ர­சபை முன்னாள் உறுப்­பினர் நந்­த­குமார் போன்­றோரைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வேறெ­வ­ரது பெயர்­களோ, முகங்­களோ ஊட­கங்­களில் அறி­யப்­ப­டா­தவை.

    கொள்கை வழியில் ஒரு கட்­சியை உரு­வாக்க முனையும் போது, அதற்கு ஒத்­துப்­போ­கத்­தக்க, ஒத்­து­ழைக்கக் கூடி­ய­வர்­க­ளையே அர­வ­ணைத்துக் கொள்ள முடியும்.

    தமிழ் மக்கள் பேர­வை­யிலும் சரி, மாற்றுத் தலை­மைக்­கான உரு­வாக்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுத்­த­போதும் சரி, விக்­னேஸ்­வ­ரனை முன்­னுக்குத் தள்ளி விடு­வதில் முக்­கி­ய­மாகச் செயற்­பட்ட பிர­ப­லங்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள், கட்சி என்று வந்­ததும், பின்­வாங்கிக் கொண்­டுள்­ளனர்.

    வடக்கு மாகா­ண­ச­பையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான பங்­கா­ளி­யான தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் முரண்­பட்டுக் கொண்டு, விக்­னேஸ்­வ­ர­னுக்கு வலது, இடது கரங்­க­ளாக, செயற்­பட்ட முன்னாள் மாகாண அமைச்­சர்கள் பொ.ஐங்­க­ர­நேசன் மற்றும் அனந்தி சசி­தரன் ஆகி­யோரும் கூட, அவ­ரது கட்­சியில் இணைந்து கொள்­ள­வில்லை.

    தாம் உரு­வாக்­கிய பசுமை இயக்­கத்தின் தலை­வ­ராக ஐங்­க­ர­நே­சனும், ஈழத்­த­மிழர் சுயாட்சிக் கழ­கத்தின் செய­லாளர் நாய­க­மாக அனந்தி சசி­த­ரனும், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் கூட்­டணி வைத்­துக்­கொள்ள தயா­ராக இருக்­கின்­ற­னரே தவிர, விக்­னேஸ்­வ­ரனின் கட்­சியில் இணையத் தயா­ராக இல்லை.

    இது, விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பின்னால் இருப்­ப­வர்கள், அவ­ரோடு அர­சியல் பயணம் செய்ய விரும்­பு­ப­வர்கள் கூட, அவ­ரது அர­சியல் கொள்கை கோட்­பா­டு­களை முழு­தாக ஏற்றுச் செயற்­படத் தயா­ரில்­லாத நிலையை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

    தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்­கத்­தின்­போது, ஏற்­ப­டுத்­திய அதிர்வு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்­கத்தில் இருக்­க­வில்லை. தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்­கத்தில் இருந்­த­ளவு அதிர்வை, அதன் நிர்­வா­கிகள் அறி­விப்பு ஏற்­ப­டுத்­த­வில்லை.

    விக்­னேஸ்­வரன் என்ற தனி­ம­னித ஆளு­மையை சுற்றி உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் விம்­பத்தின் அதிர்வு குறைந்து கொண்டு வரு­கி­றதா என்ற கேள்­வியை இது எழுப்பி நிற்­கி­றது.

    அர­சி­யலில் என்று வரும் போது, ஒரு அர­சியல் கட்­சியில், தலை­மைத்­துவக் கட்­ட­மைப்பு முக்­கி­ய­மா­னது. அதன் மீது அதி­காரம் செலுத்­தக்­கூ­டிய நிர்­வாகக் கட்­ட­மைப்பு மிக­மிக முக்­கி­ய­மா­னது. அதில் செல்­வாக்குச் செலுத்­தக்­கூ­டிய தரப்­புகள் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும்.

    விக்­னேஸ்­வரன் தனக்குப் பிந்­திய அர­சியல் பற்­றியும் பேசி­யி­ருக்­கிறார். தூர­நோக்கு செயற்­திட்டம் ஒன்றை வகுக்­கும்­போது, அவ­ரது மூப்­பையும், கருத்தில் கொண்டு தான் ஆக வேண்டும்.

    அவ்­வா­றான நிலையில், விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பிந்­திய அர­சியல் தலை­மைத்­துவம் பற்­றிய கேள்­வி­க­ளுக்கு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் நிர்­வா­கிகள் மட்டம் போதிய நம்­பிக்­கையைக் கொடுத்­துள்­ளது என்று கருத முடி­யாது.

    தமிழ் மக்கள் கூட்­ட­ணியை பெரும் இலட்­சி­யத்­துடன் உரு­வாக்­கி­யுள்ள விக்­னேஸ்­வரன், தமது கட்­சியை வடக்கு – கிழக்கு முழு­வதும் கொண்டு செல்லக் கூடி­ய­ள­வுக்கு பரந்­து­பட்ட ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்க வேண்டும். அதனைச் செய்­யாமல், அவரால் தமிழ் மக்கள் கூட்­ட­ணியை ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சி­யாக மாற்ற முடி­யாது.

    தமிழ் மக்கள் கூட்­டணி எடுத்த எடுப்­பி­லேயே பரந்­து­பட்ட நிர்­வாக கட்­ட­மைப்பை உரு­வாக்க முடி­யாது என்­பது உண்­மையே. விக்­னேஸ்­வ­ரனே அர­சி­ய­லுக்கு கத்­துக்­குட்டி தான். அர­சி­யலில் பழம் தின்று கொட்டை போட்­ட­வர்கள் மத்­தியில், அர­சியல் ஆளுமை அனு­ப­வ­மற்­ற­வர்­களைக் கொண்ட ஒரு நிர்­வாகக் கட்­ட­மைப்பை உரு­வாக்க முனைந்­தி­ருப்­பது எந்­த­ள­வுக்கு வெற்­றி­ய­ளிக்கக் கூடிய அணு­கு­மு­றை­யாக இருக்கும் என்­பது கேள்வி தான்.

    பரந்­து­பட்ட ஒரு நிர்­வாகக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வதில் பெரும் சிர­மங்கள் இருக்­கின்­றன. அதனால் தான், முத­லா­வது மத்­திய செயற்­கு­ழு­வையும், அதன் நிர்­வா­கி­க­ளையும், அவரே நிய­மித்­தி­ருக்­கிறார்.

    அதா­வது இப்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள நிர்­வா­கிகள் அனை­வ­ருமே, விக்­னேஸ்­வ­ரனால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் தான். ஜன­நா­யக சூழல் இல்­லாத – ஏக­த­லை­மைத்­துவம் ஒன்றில் தான் இத்­த­கைய அறி­விப்­புகள் வெளி­யி­டப்­படும்.

    கட்­சியின் அடுத்த செயற்­குழு, கட்­சியின் நிர்­வாக மட்­டத்தில் இருந்து தெரிவு செய்­யப்­படும் என்றும், கட்சி யாப்­புக்கு இணங்க அது முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார். அது எந்­த­ள­வுக்கு சாத்­தி­யப்­படும் என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும்.

    கட்­சியின் ஜன­நா­யகத் தன்மை பற்றி விக்­னேஸ்­வரன் எடுத்துக் கூறி­யி­ருக்­கிறார். தன்னால் தெரிவு செய்­யப்­பட்ட நிர்­வாகம், தன்னை வெளியே போகச்­சொன்­னாலும் அதற்குத் தயார் என்றும் கூறி­யி­ருக்­கிறார். அது ஒரு­போதும் நடக்­காது என்­பது அவ­ருக்குத் தெரியும்.

    ஏனெ­னெ்றால் அது விக்­னேஸ்­வரன் என்ற ஆளு­மையைச் சுற்றி மாத்­தி­ரமே உரு­வாக்­கப்­பட்­டது. அந்த ஆளு­மையில் வெற்­றிடம் ஏற்­பட்டால் என்ன நடக்கும் என்­பது அதன் நிர்­வா­கி­க­ளுக்குத் தெரியும்.

    அது­வல்ல ஜன­நா­யகம். கட்­சியின் முழுக் கட்­ட­மைப்­பையும் வெளிப்­ப­டைத்­தன்மை கொண்­ட­தாக மாற்­று­வது தான் ஜன­நா­யகம். உட்­கட்சி ஜன­நா­யகம் என்­பது அர­சி­யல்­கட்­சிகள் மத்­தியில் அரி­தான ஒன்று. அதனை தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யிலும் எதிர்­பார்ப்­பது மிகை­யான எதிர்­பார்ப்பு தான்.

    கட்­சியின் நிர்­வா­கி­க­ளுக்கு கடி­வாளம் போடும் வகையில் விக்­னேஸ்­வரன். கூறி­யி­ருக்கும் ஆலோ­ச­னையே அதனை நிரூ­பிக்­கி­றது.

    மத்­திய குழுக் கூட்டம் நடந்த அன்று யாழ்ப்­பாண நாளிதழ் ஒன்று விக்­னேஸ்­வ­ரனின் கட்­சியின் ஜன­நா­ய­கத்­தன்மை பற்றி கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­தது. பின்னர் நடந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் அதனை விக்­னேஸ்­வரன் விச­னத்­துடன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

    முன்­ன­தாக, நிர்­வா­கிகள் மத்­தியில் தனது உரை­யிலும், ஊட­கங்கள் குறித்து விழிப்­புடன் இருக்க வேண்டும் என்று அறி­வு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

    “அர­சியல் தொடர்பில் ஊட­கங்கள் மற்றும் ஏனை­ய­வர்­க­ளுடன் கருத்­துக்­களைப் பகி­ரும்­போது மிகவும் அவ­தா­ன­மாக இருந்து கொள்­ளுங்கள். கட்­சிக்கு என்று உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சாளர் ஒருவர் இருக்­கிறார். அவர் மிகக் கவ­ன­மாக சிந்­தித்துச் செயற்­படக் கூடி­யவர்.

    ஆதலால் கட்சி சார்ந்த கருத்­துக்­களை உங்கள் எண்­ணப்­படி பேசி சர்ச்­சை­களில் சிக்­கு­வதை தவிர்த்துக் கொள்­ளு­மாறு வேண்டிக் கொள்­கின்றேன். சில கேள்­வி­க­ளுக்குப் பதில் நீங்கள் சொல்­லியே ஆக வேண்டும் என்­றில்லை. அவற்­றிற்­கான பதில்­களைக் கட்­சியின் தலை­மைகள் கூற விடு­வதில் தவ­றில்லை.

    அர­சியல் ரீதி­யாக நடத்­தப்­படும் சில ஊட­கங்கள் எங்கள் மீது சேறு பூசக் காத்து நிற்­பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. எப்­பொ­ழுதும் அவ­தா­ன­மாக இருக்க நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும் ” என்று அவர் கூறி­யி­ருந்தார்.

    கட்சி நிர்­வா­கி­க­ளுக்கு அவ்­வாறு ஆலோ­சனை கூறிய விக்­னேஸ்­வரன் அந்த உரையின் கடை­சியில், தானே வில்லங்கமான கருத்தொன்றையும் முன்வைத்தார்.

    “பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியை அரசியலில் தளர்த்த, பல வகையானோரைத் தனக்கு ஆதரவாளர்கள் ஆக்கினார்.

    கமக்காரர், மீனவர், ஆசிரியர், சுதேச வைத்தியர்கள் மற்றும் பௌத்த சங்கத்தினரைத் தம்முடன் இணைத்து வெற்றி வாகை சூடினார்.

    நாம் மேற்கூறிய பதினொரு வகையானோரை எமது ஆதரவாளர்களாக ஆக்கியுள்ளோம். ஆகவே , எந்தத் தேர்தல் ஆனாலும் எமக்கு வெற்றி நிச்சயம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அதாவது, தமது வெற்றிக்கு முன்னுதாரணம் காட்டுவதற்கும், பண்டாரநாயக்கவைப் பயன்படுத்துகின்ற நிலையில் தான், விக்னேஸ்வரன் இருக்கிறார்.

    அவருக்கு ஒரு தமிழ்த் தலைமை, ஒரு தமிழ்க் கட்சி கூடவா உதாரணத்துக்கு கிடைக்காமல் போனது? என்ற கேள்வியின் நியாயத்தன்மையை அவர் புரிந்து கொள்வார்.

    வில்லங்கத்தை தாமே விதைத்து விட்டு, ஊடகங்களின் மீது பழிபோடுவதில், சுமந்திரன் மாத்திரமல்ல, விக்னேஸ்வரனும் அதற்குச் சளைத்தவரில்லைப் போலும்.

    Post Views: 11

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023

    வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்

    March 27, 2023

    Leave A Reply Cancel Reply

    January 2019
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Dec   Feb »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version