ஆயுர்வேத நிலையம் என்னும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜகிரிய புத்கமுவ வீதி – பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்னும் போர்வையின் கீழ் விபச்சார விடுதியொன்று இயங்கி வந்துள்ளது.
சந்தேக நபர்கள் 23 வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய வவுனியா , ஹொகன்தர , மதகம , பலாங்கொடை , தணமல்வில பொரளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது.
சந்தேக நபர்களை புதுக்கடை இல 04 நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வெலிகடை பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து செல்கின்றனர்.