அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சற்று முன் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்து கொண்டனர்.
இரு நாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.
இந்நிலையில் இன்றைய இரண்டாவது சந்திப்பின் போது பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலத்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.