பங்காளாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் இருபத்தாறு நாட்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பங்காளாதேஷ் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதியில் உள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து இவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் அமைந்துள்ளது தெரிய வந்தது.
இதற்கிடையே, கடந்த பெப்ரவரி மாதம் அரிபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
அதன் பின்னர்,தொடர்ந்து வீட்டிலிருந்த அவருக்கு மார்ச் 21 ஆம் திகதி மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அரிபா உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அதிசயத்தக்க வகையில் மார்ச் 22 ஆம் திகதி அவருக்கு அறுவை சிகிச்சை வழியே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து அரிபாவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் தெரிவிக்கையில்., மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை தாங்கள் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்துள்ளனர்.