வெலிகம பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் பேருந்தில் சிக்கி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த பேருந்தில் வந்த நபரொருவர் கவனயீனமாக பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட வேளை இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அவரின் கால்கள் மீது பேருந்தின் முன்பக்க சில்லு ஏறியதில் படுகாயமடைந்து, மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளது.