மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்ற நபரொருவர் அங்கிருந்த தங்க நகையொன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
நேற்று காலை பித்தளை பொருட்களை விற்பனை செய்வதாக கூறி குறித்த விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்த சுமார் 72500 ரூபாய் மதிப்புடைய தங்க நகையொன்றை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளார்.
விற்பனை நிலையத்தின் உரிமையாளரான பெண், விற்பனை நிலையத்திற்கு முன்னால் சென்ற சந்தர்ப்பத்தில் நகை கொள்ளையிடப்படுவது அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் படி, உடனடியாக செயற்பட்ட ஹக்மன பொலிஸார் பாதுகாப்பு கெமராவை பரிசோதித்து நேற்று மாலை நகையை திருடிய நபரை பெலிஹத்த பிரதேத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
பெலிஹத்த பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து சந்தேகநபர் இன்று(31) தெஹியன்தர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.