அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த அலவின் கென்னார்ட் எனும் இந்நபர் 1983 ஆம் ஆண்டு 22 வயது இளைஞராக இருந்தபோது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பேக்கரி ஒன்றில் 50.75 டொலர்கள் கொள்ளையடித்தமையே இதற்குக் காரணம்.
இவர் அதற்கு முன்னரும் 3 தடவைகள் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டிருந்தார்.
1979 ஆம் ஆண்டு அவர் 3 ஆவது கொள்ளைச் சம்பவமொன்றில் குற்றவாளியாக காணப்பட்டதால் அவர் 3 வருட கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
பேக்கரியொன்றில் 50.75 டொலர் கொள்ளையடித்து, 1983 ஆம் ஆண்டு 4 ஆவது தடவையாக நீதிமன்றில் நிறுத்தப்பட்டதையடுத்து, அலபமாவின் பழைய தண்டனைக் கொவையின் கீழ் அல்வின் கென்னார்ட்டுக்கு 1983 ஆம் ஆண்டு, பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் 36 வருடங்களாக அல்வின் கென்னார்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 58 வயதாகுகிறது.
சட்டத்தரணி ஒருவர் இல்லாததால் இது போன்ற சிறு குற்றங்களுக்கு நீண்ட காலத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் விடயம் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.
அதையடுத்து, அல்வின் கென்னார்ட்டுக்காக வாதாடுவதற்காக கார்லா க்ரவ்டர் எனும் சட்டத்தரணி நியமிக்கப்பட்டார்.
அல்வின் கென்னார்ட்டுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அளவுக்கு அதிகமானது என நீதிபதி டேவிட் கார்பென்டரை சட்டத்தரணி கார்லா க்ரவ்டர் ஏற்கச் செய்தார்.
தற்போதைய சட்டங்களின் படி, மேற்படி குற்றத்துக்கு அதிகபட்சமாக 20 வருட சிறைத்தண்டனையே விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்பின் அல்வின் கென்னார்ட்டை சிறையிலிருந்து விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தனது குற்றச்செயல்களுக்காக தான் வருந்துவதாக அல்வின் கென்னார்ட் நீதிமன்றத்தில் மீள் தீர்ப்புக்கு முன்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.