முறிகண்டி ஏ9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விபத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் நெருங்கிய செயற்பாட்டாளரான தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.