வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு நேற்றையதினம் சென்ற பொலிஸார் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குத் தகவல் தெரிவித்திருந்த துடன், யானைஉயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.