யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி புளியங்குளத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம், பரிசங்குளம் ரயில்க்கடவையில் பயணித்த போது ரயிலில் மோதுண்டு பரிசங்குளம் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த விக்கினன் என்பவர் மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.