இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த பெண் காப்பாற்றப்பட்ட சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளன.நான்கு வயது பெண் பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் போட்டு விட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றைய நான்கு வயது பெண் பிள்ளை மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.