வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தங்கல்லையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது பஸ்ஸில் பயணித்தவர்களில் 4 இராணுவத்தினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.