ஒன்பது மாதங்களேயான ஆண் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மிரிஸ்லாவா மற்றும் கெலம் தம்பதியினரின் ஒன்பது மாதங்களையுடைய காசியன் கோட்ஸ் என்ற குழந்தையே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது.
காசியன் கோட்ஸுக்கு பல நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி இருந்ததைத் தொடர்ந்து பெற்றோர் கோட்ஸை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது வைத்தியர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, காசியன் கோட்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோட்ஸின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தும் உள்ளனர்.
இதன் மூலம் பிரிட்டனில் மிகக் குறைந்த வயதையுடைய கொரோனா தொற்று நோயாளராக காசியன் கோட்ஸ் என்ற குழந்தை அடையாளம் காணப்பட்டுளளது.
தற்போது குழந்தை காசியன் கோட்ஸும் அவரது பெற்றோரும் அவர்களது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.