கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபது ஆயிரத்தை கடந்தது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,055ஆக உள்ளது.
அதன்படி, உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் இதுவரை 14,681 பேரும், ஸ்பெயினில் 11,744 பேரும், பிரான்சில் 6,507 பேரும், பிரிட்டனில் 4,313 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் 2,78,568 பேருக்கும், ஸ்பெயினில் 1,24,736 பேருக்கும், இத்தாலியில் 1,19,827 பேருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில், 2,33,930 பேர் இதுவரை நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுத்தளம் கூறுகிறது.