அமெரிக்கா இவ்வளவு மோசமான நிலைக்கு வராமல் முன்பே தடுத்திருக்க முடியும் என்று அமெரிக்க சுகாதார துறையை சேர்ந்த முக்கிய அதிகாரி கூறி உள்ளார்.
சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“சரியான பாதையில் நாம் சென்றிருந்தால், சமூக முடக்கத்திற்கு முன்பே நாம் உத்தரவு பிறப்பித்திருந்தால் இவை அனைத்தையும் நாம் முன்பே தவிர்த்திருக்க முடியும்,” என்று மருத்துவர் ஆண்டனி ஃபெஸி கூறி உள்ளார்.
நாம் நிலையை சிக்கல் ஆக்கிவிட்டோம் என்று கூறும் அவர், எனது கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் 555, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர்கள். விரைவில் அதாவது அடுத்த மாதம் நாட்டின் சில பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் கூறி உள்ளார்.