கொரோனா வைரசின் ஆரம்பம் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுபவர்களிற்கு எதிராக சீனா நடவடிக்கைகளை எடுக்கின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக விவாதங்கள் கருத்துபரிமாறல்கள் இடம்பெறுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே சீனா இதனை செய்ய முயற்சிக்கின்றது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் இரு பிரபல பல்கலைகழகங்களில் கொரோன வைரஸ் தொடர்பான ஆய்வுகளை அரசாங்க அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்ற அறிவிததல்கள் வெளியாகியிருந்தன பின்னர் அவை நீக்கப்பட்டுள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை மேலதிக ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே அவற்றை வெளியிட முடியும் என்ற விதிமுறையை சீனா உருவாக்கியுள்ளது எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது.
புடான் பல்கலைகழகம் மற்றும் சீனாவின் புவி அறிவியல் பல்கலைகழகம்(வுகான்) ஆகியவற்றின் இணையத்தளங்களில் ,வைரஸ்தொடர்பான ஆராய்ச்சிகள் உணர்வுபூர்வமானவை – அரசாங்க அதிகாரிகளின் சோதனைகளிற்கு உட்படவேண்டியவை என்ற அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
சீனா வைரசின் ஆரம்ப நாட்கள் முதல், அதன் உருவாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து எவ்வாறான கருத்து காணப்படுகின்றது என்பது குறித்து உன்னிப்பான கவனத்தை செலுத்துகின்றது என பேராசியர் ஸ்டீவ் சாங் என்பவர் தெரிவித்துள்ளார்.
சீனாவை பொறுத்தவரை வைரசினால் ஏற்படக்கூடிய சுகாதார பொருளாதார பாதிப்புகளை விட வைரஸ் குறித்து கருத்துப்பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவது முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் வைரசினால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் வைரஸ் எங்கிருந்து ஆரம்பமானது மற்றும் அதன் ஆரம்ப நாட்கள்;- (சீனா அதிகாரிகள் உண்மையை மறைத்தனர் )குறித்த விபரங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை என கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் பல்கலைகழக இணையத்தளங்களில் வெளியாகியுள்ள ஆவணங்கள் உண்மையானவை என்றால் சீனா வைரஸ் குறித்த கருத்துப்பரிமாறலை கடுமையாக கட்டுப்படுத்த விரும்புகின்றது என்பது நிருப்பிக்கப்படுகின்றது என பேராசிரியர். சாங் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை பல்கலைகழக கல்விமான்கள் குழுவொன்று முதலில் ஆராயவேண்டும்,அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் சரியானவையா பிரசுரத்திற்கு உகந்தவையா என்பதை ஆராயவேண்டும் என சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வைரஸ் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை ஆய்விற்கு உட்படுத்திய பின்னர் அதனை விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு அறிவிக்கவேண்டும்,அமைச்சு ஆராய்ந்த பின்னரே அதனை பிரசுரிக்கவேண்டும் எனவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வுகான் பல்கலைகழகத்தின ரென்மின் மருத்துவமனையை சேர்ந்தவர்களும் கொரோனாவின் ஆரம்ப காலம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் அவற்றை வெளியிடுவதற்கும் அனுமதி தேவை என கார்டியன் தெரிவித்துள்ளது.
புடானின் தகவல் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தினால் ஏப்பிரல் 9 ம் திகதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில் வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரைகளை கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது.
விசேட அலுவலகம் அனுமதி வழங்கிய பின்னரே ஆராய்ச்சிக்கட்டுரைகளிற்கு அனுமதி வழங்கலாம் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் போன்றவற்றை அவதானிக்கும் போது அது சீனாவின் கல்வியமைச்சின் அலுவலகம் என்பது புலனாகின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது.
விஞ்ஞான செயற்பாடுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கான சீன அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத நபர்கள் கார்டியனிற்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சீனா அரசாங்க அதிகாரிகள் மற்றும தூதரக அதிகாரிகளின் கருத்தை பெறமுயன்றவேளை பதில் கிடைக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.