இந்தியாவின் ஆக்ராவில் நிலத்தில் சிந்திய பாலிற்காக நபர் ஒருவரும் நாய்களும் போட்டிபோடுவதை காண்பிக்கும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
ஆக்ராவின் ராம்பாக் சவுகாராவில் பாலை ஏற்றிக்கொண்டுவந்த கொள்கலன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானவுடன் பால் வெளியில் சிந்தியுள்ளது.
இந்நிலையில் நபர் ஒருவர் தன்னால் முடிந்தளவிற்கு சிறிய பாத்திரத்தில் பாலை சேகரிக்க முயல்வதையும், அதேவேளை நாய்கள் பாலை பருகுவதையும் அந்த படத்தி;ல் காணமுடிகின்றது.
கொரோனா வைரசினால் இந்தியா முடக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் நாட்டின் வறியமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை இந்த காட்சி வெளிப்படுத்துகின்றது என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.