ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே கணவர் இருந்ததால், தன் ஆண் நண்பரிடம் மனைவியால் பேச முடியவில்லை. அதையும் மீறி இருவரும் பேசியதை கணவர் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், தூங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கொலை செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜா கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி புஷ்பா (39). இந்தத் தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் நடந்துவிட்டது.
”சம்பவத்தன்று இரவு குழந்தைகளை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளார் ரமேஷ். வீட்டில் கணவனும் மனைவியும் மட்டுமே இருந்துள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ரமேஷ், மனைவியைக் கொலை செய்துள்ளார்’
-போலீஸ்
ரமேஷைப் பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். புஷ்பா, தூங்கியுள்ளார். ஆனால் ரமேஷுக்கு தூக்கம் வரவில்லை. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த புஷ்பாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார் ரமேஷ்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்குப் போராடியுள்ளார். ஆனால், ஆத்திரம் தீரும்வரை புஷ்பாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே புஷ்பா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் விடியும் வரை ரமேஷ் வீட்டிலேயே இருந்தார். விடிந்ததும் கவரைப்பேட்டை காவல் நிலையத்துக்கு கத்தியோடு சென்றார்.
ரத்தக்கறை படிந்த கத்தியைப் பார்த்ததும் போலீஸார் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர், மனைவியைக் கொலை செய்த தகவலைக் கூறினார். அதனால் அவரைக் கைது செய்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
புஷ்பாவின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவத்தன்று இரவு குழந்தைகளை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளார் ரமேஷ். வீட்டில் கணவனும் மனைவியும் மட்டுமே இருந்துள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ரமேஷ், மனைவியைக் கொலை செய்துள்ளார்” என்றனர்.
ஊரடங்கு சமயத்தில் மனைவியைக் கணவர் கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.