ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    கொரோனா வைரஸ் கோவிட் 19: இந்தியாவை விட இலங்கை சிறப்பாக கையாண்டது – ஆஸ்திரேலிய நிறுவனம் புகழாரம்

    AdminBy AdminApril 18, 2020Updated:May 18, 2020No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கோவிட்-19 ரைவஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான ICMA நிறுவனத்தினால் தரப்படுத்தலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தரப்படுத்தலின் பிரகாரம், கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை 9ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.

    உலகின் வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, இந்தியா, ஜெர்மனி, சுவிஸர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை பின்தள்ளி, இலங்கை முன்னிலைக்கு வந்துள்ளது.

    கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசத் தலைவர்கள் மற்றும் நாடுகள் முன்னெடுத்துள்ள சுகாதார கட்டமைப்பு தயார் நிலைமை குறித்து இந்த தரப்படுத்தலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த தரப்படுத்தலின் பிரகாரம், நியூஸிலாந்து முதல் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

    சிங்கப்பூர் 2ஆவது இடத்தையும், அயர்லாந்து 3ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியா 4ஆவது இடத்தையும் பின்லாந்து 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

    இந்த தரப்படுத்தலில் இந்தியா 38ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை, ரஷ்யா 50ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

    ஸ்பெயின் இறுதி இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இலங்கை கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்.

    சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இலங்கை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் கடமையாற்றியதாக ICMA நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த தரப்படுத்தல் தொடர்பில் நிறுவனத்தின் அறிக்கையில் தெளிவூட்டல்களை வழங்கியே இந்த விடயத்தை கூறியுள்ளது.

    இலங்கை இராணுவம் மற்றும் தேசிய உளவுத்துறை ஆகியன எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

    சீனாவின் வுஹான் மாகாணத்தில் கோவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்த பின்னணியில், அங்கு நிர்கதிக்குள்ளான 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்த முதலாவது நாடாக இலங்கை திகழ்ந்தது என அதில் கூறப்பட்டுள்ளது.

    இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் இலவச பொது சுகாதார அமைப்பு இருக்கின்றமையே இவ்வளவு சிறப்பாக இதனை முகம் கொடுக்க காரணம் என அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

    பாடசாலை கல்வி முதல் பட்டதாரி வரை இலங்கையில் இலவச கல்வி முறை காணப்படுகின்றதை இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இலங்கையில் நன்கு ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் நவீன மருத்துவ பீடங்களின் நிலை மூலம் பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான தகுதி வாய்ந்த சுகாதார வல்லுநர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறையினர் இருந்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    தீவு தேசமொன்று ஒரு வலுவான நூற்றாண்டு பழமையான சமூக சுகாதார திட்டத்தை கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

    மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் குறைவான தேசமாக இலங்கை காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

    இலங்கையின் இன்றைய நிலைமை

    இலங்கையில் ஜனவரி மாதம் 27ஆம் தேதி முதல் இன்று வரை கோவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு 244 பேர் இலக்காகியுள்ள நிலையில், அவர்களில் 77 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    அத்துடன், 160 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 148 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பரவ ஆரம்பித்த பின்னணியில், மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

    கோவிட்-19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழும் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்காக சுகாதார பிரிவினருடன் போலீஸார் மற்றும் முப்படையினர் இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

    தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியில் கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது பெருமளவு குறைவடைந்துள்ள நிலையில், இலங்கை எதிர்கொண்ட அச்ச நிலைமை நீங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    Post Views: 360

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

    February 4, 2023

    முடங்கியது யாழ்ப்பாணம்

    February 4, 2023

    யாழ்.தெல்லிப்பழையில் இராணுவத்திடமிருந்து 108 ஏக்கர் காணி விடுவிப்பு

    February 3, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2020
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.

    February 5, 2023

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.
    • பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version