அதன்படி, கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 திங்கள் காலை 5 மணி வரை நீட்டிக்கப்படும்.
ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு அமுலாகி, ஏப்ரல் 27 திங்கள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதன்படி, இந்த மாவட்டங்களில் 25 சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு தொடரும்.
கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளலம் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நுழைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது, அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை பராமரிப்பது குறித்து முன்னர் வெளியிடப்பட்ட நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மாறாமல் உள்ளன.