மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததையடுத்து பேரப் பிள்ளையை சென்று பார்ப்பதற்காக தாய் தந்தை மற்றும் சிறிய சகோதரன் ஆகியோர் ஏனைய ஏனைய இரு சகோதரிகளையும் குறித்த சிறுமியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கடந்த மாச் மாதம் இரத்தினபுரிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து பேரப்பிள்ளையை பாக்கச் சென்ற பெற்றோர் திரும்ப தமது வீட்டுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் குறித் சிறுமி மற்றம் அவருடைய இரு சகோதரிகள் உட்பட 3 சிறுமிகளும் தனியே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்தச் சிறுமிகள் தனியே இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே குறித்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அதே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்தனர். சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், இரத்தினபுரியிலி ருந்து வரமுடியாத நிலையில் இருந்த குறித்த சிறுமியின் பெற்றோரை பொலிஸார் விசேட அனுமதி வழங்கி வீட்டுக்கு வரவழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply